உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இன்று திறப்பு
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இன்று திறக்கப்படுகிறது.
உயரமான ரயில்வே பாலம்
ஜம்மு காஷ்மீரின் செனாப் நதியின் குறுக்கே, 359 மீற்றர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
1,315 மீற்றர் நீளத்தில் இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம், நில அதிர்வு மற்றும் பலத்த காற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான இது, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.
இன்று திறப்பு
இந்த பாலத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இன்று திறந்து வைக்கிறார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி அங்கு செல்கிறார்.
இந்த பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |