உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இந்த நகரத்திற்கு முதலிடம்!
உலக நாடுகளில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் நேபாளத்தை சேர்ந்த நகரம், முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காத்மாண்டு நகரம்
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு(Kathmandu) முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலக நாடுகளின் காற்று மாசுபாட்டை கணக்கிடும் ஐக்யூ ஏர்-இன் கூற்றுப்படி, காத்மாண்டுவில் காற்றின் தரக் குறியீடு 190 ஐத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காத்மண்ட் நகரை புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில், உள்ளூர் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக, காத்மாண்டு மற்றும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்து வரும் மாசுபாட்டிற்கு காரணம் காட்டுத் தீ மற்றும் விவசாய எச்சங்களை எரிப்பதே என நேபாள அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
காற்று மாசுபாடு
கட்டுமானப் பணிகளால் ஏற்படும் தூசி, பழைய, மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்களின் புகை, நிலக்கரி, செங்கல் சூளைகளின் புகை ஆகியவை காத்மாண்டு நகரை சூழ்ந்துள்ளது.
இதனால் அந்நகரில் வாழும் மக்களுக்கு புற்றுநோய், பக்கவாதம், ஆஸ்துமா மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் அந்நகரில் வசிக்கும் மக்களுக்கு சராசரி வாழ்நாள் குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகமயமாக்கலின் தாக்கத்தாலும், அந்நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கலும் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
அந்நகரில் மக்கள் பிழைப்பிற்காக அளவிற்கு மீறி குடிபெயர்வதால் மக்கள் தொகை அதிகரிப்பதோடு , வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் காற்று மாசுபாட்டை உண்டாக்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.