உலக அகதிகள் தினம் இன்று! எதனால் ஜூன் 20 அனுசரிக்கப்படுகிறது?
உலகில் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர்.
அகதிகள் என்றால், போரினாலோ அல்லது வறுமையினாலோ தனது சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுபவர்களை தான் அகதிகள் என்று கூறுகிறோம்.
2000-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி அகதிகளுக்கான ஆதரவினை வெளிப்படுத்தும் விதமாக உலக அகதிகள் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்படி உலக அகதிகள் தினம் முதன்முதலில் ஜூன் 20, 2001 அன்று 1951 அகதிகள் மாநாட்டின் 50-வது ஆண்டு மாநாட்டின் போது கொண்டாடப்பட்டது.
UNHCR-ன் கூற்றுப்படி, ஜூன் 20 முன்னதாக ஆப்பிரிக்கா அகதிகள் தினமாகக் குறிக்கப்பட்டிருந்தது, ஆனால் அது டிசம்பர் 2000-லிருந்து உலக அகதிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்றைய நாள் உலகில் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால், அரசியல், சமூக சூழல் காரணமாக அகதிகளாக அல்லல்படும் அகதிகளை நினைவு கூறும் வகையில், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் சுமார் 80 மில்லியன் மக்கள் அகதிகளாக இருக்கின்றனர். மேலும் துன்புறுத்தல், பயங்கரவாதம் மற்றும் போர் காரணமாக ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.