இஸ்லாமிய நாட்டில் முருகன் கோயில் உருவானது எப்படி? (வீடியோ)
மலேசியா நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோவிலாக மலேசிய முருகன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படுகிறது.
இங்குள்ள முருகன் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்தக் குகைக்கோவிலின் உள்ளே பல குகைகள் உள்ளன.
மலாய்க்காரர்கள் எனப்படும் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வழிபடுவதில்லை என்றாலும் இக்கோவிலையும், இங்குள்ள மிகப்பெரிய முருகன் சிலையையும் சுற்றுலாவாக வந்து பார்த்து வியந்து செல்கின்றனர்.
மேலும் இக்கோயில் பற்றிய சிறப்பான தகவல்களை தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |