நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு பலித்தது: மூன்றாம் உலகப்போர் அச்சத்தில் மக்கள்
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு பலித்துள்ளதாக மக்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.
நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு பலித்தது
புகழ் பெற்ற பிரெஞ்சு ஜோதிடக்கலை நிபுணரான Michel de Nostredame என்னும் நாஸ்ட்ரடாமஸ், 450 ஆண்டுகளுக்கு முன், தனது Les Prophéties என்னு புத்தகத்தில் உலகில் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பல்வேறு விடயங்களை கணித்து எழுதியுள்ளார். ஹிட்லருடைய எழுச்சி, அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி கொலை முதல், கோவிட் வரை அவர் கணித்த பல விடயங்கள் துல்லியமாக நிறைவேறியுள்ளன.
இந்நிலையில், அவர் மூன்றாம் உலகப்போர் குறித்து கணித்த ஒரு விடயம் தற்போது நிறைவேறியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
Image: ullstein bild via Getty Images
நாஸ்ட்ரடாமஸின் 2024ஆம் ஆண்டு குறித்த கணிப்பு ஒன்றில், அவர் ‘Red adversary will become pale with fear, putting the great Ocean in dread’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, சிவப்பு எதிரி பயத்தில் வெளிறிப்போக, பெரிய சமுத்திரம் அச்சத்தில் மூழ்கும் என அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கணிப்பு சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறிப்பதாக சிலர் கருதும் நிலையில், சிலர் ஹவுதிகள் செங்கடலில் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்த கணிப்பு அது என்கிறார்கள்.
Image: Iranian state TV
அச்சத்தில் மக்கள்
சனிக்கிழமை இரவு திடீரென ஈரான், இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
Image: Getty Images
ஏப்ரல் 1ஆம் திகதி, சிரியாவிலுள்ள ஈரானிய தூதர்கள் வாழும் காம்பவுண்ட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பு விளக்கமளித்துள்ளது.
Image: KHAMENEI.IR/AFP via Getty Images
தற்போது இஸ்ரேல் மீது ஈரான் நிகழ்த்தியுள்ள தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உருவாகியுள்ளது. அது தொடர்பான செய்திகள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்க, மூன்றாம் உலகப்போர் நெருங்கிவிட்டதாக மக்கள் அச்சப்படத் துவங்கியுள்ளனர். அது தொடர்பான கருத்துக்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.
Image: AFP via Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |