3ம் உலகப் போர் துவங்கிவிட்டது... அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்: எச்சரிக்கும் வெள்ளைமாளிகை அதிகாரி
உக்ரைனின் நான்கு பிரதேசங்களை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி புடின்.
அணு ஆயுத பயன்பாடு முன்னெடுக்கப்பட்டால் அதன் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என அமெரிக்க
மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது, ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என எச்சரிக்கை விடுத்துள்ளார் வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர்.
விளாடிமிர் புடின் காலத்து ரஷ்யா தொடர்பில் ஆய்வுகள் பல மேற்கொண்டுள்ள பியோனா ஹில் என்பவர் தெரிவிக்கையில், உக்ரைன் போரில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையிலும் நாம் எதையும் அறிந்துகொள்ளமுடியாத பிரதேசத்தில் இருக்கிறோம் என்றார்.
@getty
உக்ரைன் போரில் சமீப நாட்களில் பதட்டங்கள் அதிகரித்தே காணப்படுகிறது. உக்ரைனின் நான்கு பிரதேசங்களை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி புடின்.
மேலும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தி அமெரிக்கா முன்மாதிரியாக இருந்துவிட்டது என தெரிவித்து, உக்ரைன் மீதான நடவடிக்கை இனி என்னவாக இருக்கும் என்பதையும் புடின் கோடிட்டு காட்டியதாகவே கூறுகின்றனர்.
@getty
ஆனால், இவ்வாறான சூழலை எதிர்கொண்டு வந்திருக்கிறோம் எனவும், ஆனால் அடையாளப்படுத்த நாம் தவறிவிட்டோம் என்கிறார் பியோனா ஹில். இதனிடையே, அணு ஆயுத பயன்பாடு முன்னெடுக்கப்பட்டால் அதன் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2014ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்வசப்படுத்திய வேளையிலேயே அச்சுறுத்தல் ஆரம்பமாகிவிட்டது என்கிறார் பியோனா ஹில். ஆனால், ரஷ்யாவின் இந்த போக்கை கட்டுப்படுத்தாவிட்டால், பெரும் ஆபத்து காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
@getty