ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்த பிரபல வீரருக்கு மீண்டும் கொரோனா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்த பிரபல வீரர் சாஹாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கே.எல். ராகுல், சாஹா ஆகியோர் உடற்தகுதியை பொறுத்து இந்திய அணியில் தேர்தெடுக்கப்படுவர் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக 2021 ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்ட நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவரான ஐதராபாத் வீரர் சாஹா, தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கிறார்.
— Wriddhiman Saha (@Wriddhipops) May 14, 2021
தனிமைப்படுத்தலில் இருக்கும் சாஹா, தனக்கு மீண்டும் தொற்று உறுதியாகியுள்ளதாக இன்று 14-05-2021 தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாஹா வெளியிட்ட அறிக்கையில், எனது தனிமைப்படுத்தல் காலம் இன்னும் முடியவில்லை.
வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் ஒன்றில் பாசிட்டிவ், மற்றொன்றில் நெகட்டிவ் என்றும் வந்துள்ளது. மற்றபடி நான் நன்றாக உள்ளேன்.
எந்தவொரு தவறான தகவலையும் யாரும் எதுவும் தெரியாமல் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.