இலங்கை தமிழர்களுடனான நேர்மையான உறவை இந்தியா ஏற்படுத்தினால்..இலங்கை எழுத்தாளர் ஜெயபாலன் கருத்து
சீனா தனது இரண்டாவது கூட்டாளியாக ரஷ்யா கொண்டுள்ளது போல், இந்தியாவை தனது 2வது கூட்டாளியாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கும் என எழுத்தாளர், நடிகர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் சேராமல் இந்தியாவால் சீனாவை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக எழுத்தாளர், நடிகர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேவேந்திர முனைக்கு, சீனா ஒரு ரேடார் தளத்தை ஆரம்பிக்கப் போகிறது என வெளியான செய்தி குறித்து ஜெயபாலன் விளக்கம் அளித்துள்ளார்.
சீனா தான் நினைத்ததை செய்யும் நாடாக தான் இருக்கிறது. குறிப்பாக, சர்வதேச சட்டங்களை பெரிதாக சீனா பொருட்படுத்துவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை தமிழர்களுடனான நேர்மையான உறவை ஏற்படுத்தினால், எல்லோரையும் விட கேந்திர முக்கியத்துவமான இடங்கள், மக்கள், அமைப்புகள் பெரிய பலத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.