யாராக இருந்தாலும் மிக மோசமாக வருந்துவார்கள்! புடின் எச்சரிக்கையால் 3ம் உலகப்போர் ஏற்படும் அச்சம்
ரஷ்யாவை அச்சுறுத்துவோர் யாராக இருந்தலும் அதற்காக அவர்கள் மிக மோசமாக வருந்துவார்கள் என ரஷ்ய ஜனாதிபதி புடிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புடின் தனது வருடாந்திர தேசிய உரையின் போது கூறியதாவது, சமீபத்தில் ரஷ்யாவுடன் உறவை முறித்துக்கொண்ட நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடன் நல்லுவைப் பேண நாங்கள் வரும்புகிறோம்.
எக்காரணமும் இன்றி ரஷ்யாவை சீண்டுவதை பழக்கமாக சில நாடுகள் வைத்துள்ளன.
அவர்களுடன் முற்றிலுமாக உறவை முறித்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
ஆனால், எங்கள் நல்லெண்ணத்தை பலவீனமாக எடுத்துக்கொண்டு ரஷ்யா உடனான உறவை முறித்துக்கொள்ள அல்லது எங்களுக்கு எதிராக ஈடுபட நினைப்பவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ரஷ்யாவின் பதிலடி மிக மோசமாக இருக்கும்.
ரஷ்யாவின் அடிப்படை பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்கள், இதுவரை அவர்கள் வருந்தாது அளவிற்கு மிக மோசமாக வருந்துவார்கள் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா தனது படைகளை அனுப்பியதை தொடர்ந்து சமீபத்திய வாரங்களாக ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பதட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கு மத்தியில் புடின் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது 3ம் உலகப்போர் ஏற்படுமா என பயத்தை உருவாக்கியுள்ளது.