சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மாயமா? பரவும் தகவல்கள்.. உண்மை நிலவரம் என்ன?
சீன ஜனாதிபதி மயமானதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தி
கடந்த வாரம் சீனாவில் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மாயமானதாக தகவல்கள் பரவிய நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்துகொண்டார். கொரோனா பரவலுக்கு பிறகு இதுதான் அவரது முதல் வெளிநாடு பயணம் ஆகும்.
அதன் பின்னர் அவர் எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மயமாகிவிட்டதாகவும் தகவல்கள் பரவின.
Press service of the President of Uzbekistan/Handout via REUTERS
இந்த நிலையில், சீனாவில் கடுமையான கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதால், ஜி ஜின்பிங் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
Li Xueren | Xinhua News Agency | Getty Images