யமஹாவின் முதல் மின்சார ஸ்கூட்டர் - இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் தென்பட்ட புகைப்படம்
முன்னணி இருசக்கர வாகன நிறுவனம் யமஹா (Yamaha), இந்தியாவுக்கான தனது முதல் மின்சார ஸ்கூட்டரை சோதனை ஓட்டத்தில் இயக்க தொடங்கியுள்ளது.
இது பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட ரிவர் (River Mobility) எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட மொடலாகும்.
2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், யமஹா நிறுவனம் ரிவர் நிறுவனத்தில் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்தது.
இந்த கூட்டணியின் பயனாக, ரிவரின் பரிசோதிக்கப்பட்ட தளத்தை பயன்படுத்தி யமஹா தனது சொந்த மின்சார ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது.
சோதனை ஓட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அம்சங்கள்:
ரிவர் இன்டி மொடலை போன்ற அம்சங்கள் இருந்தாலும், சில முக்கிய மாற்றங்கள் உள்ளன:
- உயரமான புதிய Tail Lamp
- புதுப்பிக்கப்பட்ட side panels
- செங்குத்தாக அமைந்த headlamp கொண்ட புதிய முன்புற வடிவமைப்பு
பேட்டரி மற்றும் செயல்திறன்:
இது ரிவர் இன்டியின் அதே பேட்டரி அம்சங்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்புள்ளது.
- 4kWh பேட்டரி பேக்
- ஒரே சார்ஜில் 120km வரை பயணிக்க கூடிய ரேஞ்சு
- 6.7kW மின் மோட்டார், 26Nm பீக் டார்க்
- 3.9 விநாடிகளில் மணிக்கு 0-40km வேகத்தை அடையும் திறன்
இந்த மின்சார ஸ்கூட்டர் ரிவரின் பெங்களூரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். உற்பத்தி 2025 இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய யமஹா மின்சார வாகனம் இந்தியாவின் மின் போக்குவரத்து சந்தையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |