உங்கள் உயிரணுக்கள், கருமுட்டையை சேமிக்கலாம்!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள், ஆண்கள் படிப்பை முடித்து நல்ல வேலைக்கு சென்று சம்பாதித்த பின்னர் தான் திருமணத்தை பற்றியே சிந்திக்கின்றனர்.
குறிப்பாக 30 வயதை நெருங்கும் போதே திருமணம் செய்ய வேண்டுமென யோசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, இளவயதில் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுபவர்களும் அதிகம்.
இவர்களுக்கு எல்லாம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம், கருமுட்டை, உயிரணுக்களை சேமித்து வைப்பது.
25 முதல் 30 வயதுக்குள்தான் பெண்களின் கருமுட்டைகள் மற்றும் ஆண்களின் உயிரணுக்கள் ஆரோக்கியமானதாகவும், தரமாகவும் இருக்கும்.
அத்தகைய கருமுட்டைகள்தான் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்தவை, எனவே திருமணத்தை தாமதப்படுத்தும்போது கரு முட்டைகளை வெளியே எடுத்து அதற்காக பிரத்யேகமாக உள்ள கருத்தரிப்பு மையங்களில் சேமித்து வைக்கமுடியும்.
சுமார் 10 ஆண்டுகள் வரை அந்த கருமுட்டைகளை பயன்படுத்தி கணவரின் உயிரணுவுடன் சேர்த்து கருவுறச் செய்யமுடியும். இதுபற்றிய விரிவான தகவல்களுக்கு,