போராடினால் பாஸ்போர்ட், அரசு வேலைகள் வழங்கப்படாது! பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பரபரப்பு தகவல்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி இந்திய விவசாயிகள் தலைநகர் டெல்லியில் மாதங்களாக போராடி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டதை கலைக்க அரசு மற்றும் காவல்துறை பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச பாடகி ரிஹானா, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் விவசயிகளுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக விவசாயிகளின் போராட்டம் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிடும் நபர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று உத்தரகண்ட் பொலிசார் கூறுகின்றனர் என உச்ச நீதிமன்ற பொது நல வழக்கறிஞரும் ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Shockingly perverse! Uttarakhand police says that passports won't be issued to people who post on social media against Govt! Bihar govt says that protestors will not be given govt jobs!
— Prashant Bhushan (@pbhushan1) February 4, 2021
The BJP wants not merely a Hindu Rashtra, but a police state like in Nazi Germany
மேலும், போராட்டக்காரர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்படாது என்று பீகார் அரசு கூறுகிறது!
பாஜக இந்து ராஷ்டிராவை மட்டுமல்ல, நாஜி ஜேர்மனியைப் போன்ற ஒரு பொலிஸ் அரசையும் உருவாக்க விரும்புகிறது என பிரசாந்த் பூஷன் விமர்சித்துள்ளார்.