பொம்மையைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்: இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாராம்...
மேலை நாடுகள் சிலவற்றில், மரத்தை, ஆவிகளை, பொம்மையை, ஏன், தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் கூட இருக்கிறார்கள்.
அப்படி, பொம்மை ஒன்றைத் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண், தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதைக் கொண்டாட, பார்ட்டியும் நடத்தியுள்ளார்.
காதலிக்க ஆள் கிடைக்காத இளம்பெண்
பிரேசில் நாட்டவரான Meirivone Rocha Moraes (37), தனக்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை என தனது தாயிடம் கூறி வருத்தப்பட்டதால், அவருக்கு ஒரு ஆளுயர பொம்மையை கணவனாகக் கொடுத்தார் அவரது தாய்.
Jam Press Vid/@meirivoneemarcelo
Marcelo என்று அழைக்கப்படும் அந்த பொம்மைக் கணவன் வந்ததிலிருந்து, Moraes செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
தனக்கும் Marceloவுக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி, சலசலப்பை உருவாக்கியிருந்தார் அவர்.
Jam Press/@meirivoneemarcelo
இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாராம்...
இந்நிலையில் தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, தன் நண்பர்கள், குடும்பத்தாருக்கு ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார் Moraes.
Jam Press/@?meirivoneemarcelo
பார்ட்டியின்போது, தனக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாக அறிவித்தார் அவர். ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருப்பதால், தன் கணவர் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டதாகவும், அவர் ஆசைப்படியே இப்போது தான் பெண் குழந்தை ஒன்றை கருவில் சுமப்பதாகவும் கூறியுள்ளார் Moraes.
Jam Press/@meirivoneemarcelo
சில மாதங்களுக்கு முன் தனக்கு தன் கணவர் துரோகம் செய்துவிட்டதாகவும் கூறி Moraes பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Jam Press/@meirivoneemarcelo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |