அழுக்கு உடையுடன் பிச்சை எடுக்கும் இளம்பெண்! அவரிடம் சென்று பேசிய நபருக்கு காத்திருந்த பெரும் ஆச்சரியம்... வெளியான வீடியோ
தென் இந்தியாவை சேர்ந்த இளம்பெண்ணொருவர் வட இந்தியாவில் பிச்சை எடுக்கும் நிலையில் அவர் பட்டப்படிப்பு படித்தவர் எனவும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுபவர் என்றும் தெரியவந்துள்ளது.
வாரணாசியில் உள்ள சாலையில் சுவாதி என்ற இளம்பெண் பிச்சை எடுத்து வருகிறார். ஆனால் அவர் மற்ற பிச்சைக்காரர்களிடம் இருந்து மாறுபடுகிறார். ஏனெனில் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் சுவாதி தான் தென் இந்தியாவை சேர்ந்தவர் என கூறியுள்ளார்.
இவர் பேசுவை வீடியோ எடுத்தவர் ஆச்சரியத்தில் வாயடைத்து போனார் என்று தான் சொல்ல வேண்டும்.
சுவாதி கூறுகையில், எனக்கு எல்லாரையும் போல கணவன், குடும்பம் என வாழ்க்கை அமைந்தது. இருப்பினும் நான் எனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, என் உடலின் வலது பக்கம் செயலிழந்தது.
இதன் பின்னர் தான் என் வாழ்க்கை தலைகீழாக மாறிபோனது. வீட்டை விட்டு துரத்தப்பட்ட நான் வாரணாசிக்கு வந்து சேர்ந்தேன், இங்கு பிச்சை எடுத்து வருகிறேன் என கூறுகிறார்.
அழுக்கான உடைகளுடன் இருப்பதால் சுவாதி மனநலம் சரியில்லாதவர் என அவ்வழியே போகும் பலரும் நினைக்கின்றனர். ஆனால் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்து சுவாதி மிக தெளிவான மனநிலையுடன் இருக்கிறார்.
தன் வாழ்க்கை பாதையை மாற்ற தனக்கு தகுந்த மாதிரி வேலை கிடைக்க வேண்டும் என்பதே சுவாதியின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சுவாதியை பார்க்கும் போது வாழ்க்கை எந்தளவுக்கு கணிக்க முடியாதது என்பதை நமக்கு காட்டுகிறது என கூறினால் அது மிகையாகாது..!