சகோதரி புதைக்கப்பட்ட இடத்தை காண சுடுகாட்டுக்கு சென்ற இளம்பெண்! அங்கு அவர் கண்ட திகிலடைய வைத்த காட்சி... புகைப்படங்கள்
அமெரிக்காவில் சுடுகாட்டுக்கு சென்று சகோதரி உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற இளம்பெண் தான் கண்ட காட்சியால் அதிர்ச்சியடைந்தார்.
நியூ ஜெர்சியை சேர்ந்தவர் ஜெசிகா தவில். இளம்பெண்ணான இவர் டிக்டாக்கில் பிரபலம் ஆவார். ஜெசிகா சகோதரி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் அவரின் சடலம் அங்குள்ள சுடுகாட்டின் கல்லறையில் புதைக்கப்பட்டது.
அங்கு எப்போதாவது செல்லும் வழக்கம் கொண்ட ஜெசிகா சமீபத்தில் கல்லறைக்கு சென்றார். அங்கு சகோதரியின் கல்லறையை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.
ஏனெனில் சகோதரி கல்லறைக்கு மேலே வேறு ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டு மணலால் மூடப்பட்டிருந்தது. இது ஜெசிகாவுக்கும், அவர் தந்தைக்கும் மிகவும் வேதனையை கொடுத்தது.
இது குறித்து ஜெசிகா கூறுகையில், சுடுகாட்டுக்கு சென்று சகோதரி கல்லறையை பார்க்க நினைத்த எனக்கு திகில் காட்சியே கிடைத்தது. என் சகோதரியின் மேல் ஒரு உடல் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன், என்னால் இதை ஏற்க முடியாது.
அந்த இடத்துக்காக நாங்கள் $12,000 பணம் கொடுத்துள்ளோம், ஆனால் ஊழியர்கள் இப்படியொடு செயலை செய்துள்ளனர். அவர்களிடம் பேசிய பின்னர் மேலே புதைக்கப்பட்ட சடலத்தை அப்பறப்படுத்தினார்கள், ஆனால் என் சகோதரி புதைக்கப்பட்ட இடத்தின் டைல்ஸ் கற்கள் எல்லாம் உடைந்து மோசமாக காட்சியளிக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையில் ஜெசிகா மற்றும் அவர் குடும்பத்தார் வழக்கறிஞர் மூலம் அந்த கல்லறை இடுகாட்டின் நிர்வாகம் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.