பிரித்தானியாவில் கொண்டாட்டத்தில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்: 38 பேர் கைது
பிரித்தானியாவில் Notting Hill கார்னிவல் கொண்டாட்டத்தின்போது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலாச்சார கொண்டாட்டம்
Notting Hill கார்னிவல் என்பது பிரித்தானியாவில் மிக நீண்டகாலமாக கொண்டாடப்படும் கலாச்சார நிகழ்வாகும்.
கரீபியன் கலாச்சாரத்தை கொண்டாடும், தெளிவான ஆடை அணிந்த கலைஞர்கள் நடனம் மற்றும் இசையுடன் இந்த கொண்டாட்டத்தின்போது வீதிகளில் அணிவகுப்பார்கள்.
ஆனால், கடந்த காலங்களில் திருவிழாக்கள் வன்முறையால் சிதைக்கப்பட்டன. குறிப்பாக கடந்த ஆண்டு 8 கத்திக்குத்து சம்பங்கள் அரங்கேறின. இதுதொடர்பில் 275 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 7,000 மெட் பொலிஸார் கென்சிங்டனின் வீதிகளில் நிறுத்தப்பட்டனர்.
கத்தியால் குத்தப்பட்ட இளைஞர்
இந்நிலையில் Notting Hill கார்னிவலின் 'Family Day' திறப்பின்போது, 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
உடனடியாக மீட்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காயங்களால் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று பெருநகர காவல்துறை உறுதி செய்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடரில் 38 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன், நான்கு கத்திகளையும் மீட்டுள்ளனர்.
தீவிர பொலிஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாலை 6.05 மணிமுதல் அதிகாலை 2 மணிவரை கார்னிவல் பகுதிக்கு Stop and Search எனப்படும் பிரிவு 60 உத்தரவு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அதிகாரிகள் சந்தேக நபர்களை எளிதாக தேடலாம் மற்றும் வீதிகளில் இருந்து ஆயுதங்களை அகற்றலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |