உலகின் நம்பர் 1 செஸ் வீரரரை வீழ்த்திய தமிழன்! பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.
இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
எட்டாவது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் கருப்பு நிறக் காய்களுடன் அற்புதமாக விளையாடி 39 நகர்த்தல்களில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.
கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும், இந்த வெற்றியை தொடர்ந்து பிரக்ஞானந்தாவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
What a wonderful feeling it must be for Pragg. All of 16, and to have beaten the experienced & decorated Magnus Carlsen, and that too while playing black, is magical!
— Sachin Tendulkar (@sachin_rt) February 21, 2022
Best wishes on a long & successful chess career ahead. You’ve made India proud! pic.twitter.com/hTQiwznJvX
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில், பிரக்ஞானந்தாவுக்கு இப்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இந்த 16 வயதில் அனுபவம் மிக்க, கொண்டாடப்படும் கார்ல்சனை அதுவும் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடி தோற்கடிப்பது என்பது மகத்தானது. செஸ் விளையாட்டில் சாதிக்க வாழ்த்துகள். இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார்.