போரில் விபத்துகளுக்கு வாய்ப்பில்லை: அமைச்சர் பலியான சம்பவத்தில் புடினை குற்றஞ்சாட்டிய ஜெலென்ஸ்கி
உக்ரைன் உள்விவகார அமைச்சர் உட்பட 14 பேர் உடல் கருகி பலியான ஹெலிகொப்டர் விபத்துக்கு காரணம் ரஷ்ய ஜனாதிபதியின் படையெடுப்பு தான் என ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உண்மையில் விபத்து அல்ல
தலைநகர் கிவ் அருகாமையில் நடந்த ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் பலர் பல காரணங்களை பதிவு செய்கின்றனர். ஆனால், அந்த ஹெலிகொப்டர் விபத்து உண்மையில் விபத்து அல்ல எனவும், இது விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுத்ததன் விளைவு என்றார் ஜெலென்ஸ்கி.
@reuters
விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பலர் பல காரணங்களை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் விசாரணை முடிவுக்கு வரும் வரையில் தம்மால் உறுதிபட எதையும் கூற இயலாது என்றார் ஜெலென்ஸ்கி.
ரஷ்யா நேரடியாக இந்த விபத்தில் ஈடுபட்டிருப்பதாக உக்ரைன் நம்பவில்லை என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, ஆனால் இது போரினால் ஏற்பட்ட விளைவு என்றார். போர் நடக்கும் போது விபத்துகளுக்கு வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, இவை அனைத்தும் போருக்கான முடிவுகள் என்றார்.
@reuters
உக்ரைன் கட்டாயம் மீட்கும்
மேலும், ரஷ்யா தற்போது சொந்தம் கொண்டாடி வரும் கிரிமியா பகுதியை உக்ரைன் கட்டாயம் மீட்கும் எனவும், அது தங்கள் நிலம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நவீன Leopard டாங்கிகளை உக்ரைனுக்கு அளிக்க ஜேர்மனி தயக்கம் காட்டுவதை கடுமையாக விமர்சித்த ஜெலென்ஸ்கி, நாம் தயங்கக்கூடாத அல்லது ஒப்பிடக்கூடாத நேரங்கள் உள்ளன என்றார்.
அமெரிக்கா தங்களின் நவீன Abrams டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கினால் மட்டுமே தாங்களும் Leopard டாங்கிகளை உக்ரைனுக்கு அளிக்க முன்வருவோம் என ஜேர்மனி அடம்பிடித்து வருகிறது. ஆனால் அந்த முடிவுக்கு இதுவரை அமெரிக்காவும் உக்ரைனும் எட்டவில்லை என பைடன் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
@reuters