நாங்கள் தாக்குதல் நடத்தமாட்டோம் - ரஷ்யாவுடன் தற்காலிக போர்நிறுத்தத்தை முன்மொழிந்த ஜெலென்ஸ்கி
Zelensky proposes ceasefire amid US envoys visit: ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் செய்ய ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.
தற்காலிக போர்நிறுத்தம்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) செய்ய முன்மொழிந்துள்ளார்.
காரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தூதர்கள் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் வார இறுதியில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் செல்ல உள்ளனர்.

ஜெலென்ஸ்கி, “அவர்களின் பயணத்தின் போது எங்கள் பக்கம் வான்வழி தாக்குதல் இருக்காது. அதேபோல் ரஷ்யாவும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இதனால் பேச்சுவார்த்தைகள் நடைபெற வழி ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் உளவுத்துறை தலைமையகத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. அந்த தாக்குதல், உளவுத்துறை தலைவரின் அலுவலகத்தை நேரடியாக குறிவைத்ததாக ஜெலன்ஸ்கி கூறினார்.
அமெரிக்க தூதர்கள், மாஸ்கோவில் சனிக்கிழமையும், கீவ் நகரில் ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது, ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு காணும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
ஜெலென்ஸ்கி, “நாங்கள் ரஷ்யாவுக்காக அல்ல, தூதர்களின் பாதுகாப்புக்காக கவலைப்படுகிறோம். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உண்மையான வாய்ப்புகள் தேவை” என்று குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக ரஷ்யா, கீவ் மற்றும் பிற நகரங்களில் பகல் நேர தாக்குதல்களை அதிகரித்துள்ளது. ஓடெசா பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர். ட்னிப்ரோவில் நடந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க தூதர்களின் பயணம், போருக்கு முடிவு காணும் முக்கிய அரசியல் முயற்சி எனக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |