மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன் உதவி- ஈடாக பணம், தொழில்நுட்பம் கேட்கும் ஜெலென்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஈரானின் காமிகாஸி ட்ரோன்களுக்கு எதிராக பாதுகாப்பு தேடும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு உதவியளிக்க உக்ரைன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கு பதிலாக பணம் மற்றும் தொழில்நுட்பம் வேண்டும் என கேட்டுள்ளார்.
உக்ரைன் நிபுணர்கள் 3 குழுக்களாக கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அவர்கள் ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகளை மதிப்பீடு செய்து, எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை விளக்குவர்.

வளைகுடா நாடுகளுடன் மிகவும் அடிப்படையான மாற்றும்நீண்டகால ட்ரோன் ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும், இந்த உதவிக்கு ஈடாக உக்ரைன் பெற்றுக்கொள்ள விரும்புவது என்ன என்பது குறித்து விவாதிக்கப்படவேண்டும் என கூறினார்.
இன்றைய நிலைமையில், உக்ரைனுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகிய இரண்டும் முக்கிய தேவையாக இருப்பதை அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை நேரடியாக போரில் ஈடுபடும் செயல்பாடு அல்ல என்றும் ஈரானுடன் உக்ரைன் போரில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான் பயன்படுத்தும் Shahed ட்ரோன்களை எதிர்கொள்ள, வளைகுடா நாடுகள் ஏராளமான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை செலவழித்துள்ளன. அதேசமயம் உக்ரைன், ரஷ்யா பயன்படுத்தும் ட்ரோன்களை தினமும் சுட்டு வீழ்த்தி வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் போரில் ஈடுபட்டதால், சமீபத்திய அமைதி பேச்சுவார்த்தைகள் தாமதமாகியுள்ளன. இந்நிலையில், மத்திய கிழக்கு பிரச்சினை காரணமாக அமெரிக்கா உக்ரைனை புறக்கணிக்கக் கூடாது என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukraine Middle East drones, Zelenskyy drone deals, Iran Shahed drone war, Ukraine technology funding #Zelenskyy #Ukraine #MiddleEast #IranWar