மக்களின் கொலைகளுக்கு ரஷ்யாவை தண்டிக்க வேண்டும்! சிறப்பு நீதிமன்றம் வேண்டும்.. கொந்தளித்த உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி
தங்கள் அரசுக்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றத்திற்காக ரஷ்யாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் வேண்டும் என ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வீடியோவில் காட்டமாக கூறிய ஜெலன்ஸ்கி
உக்ரைனில் நடந்த போருக்கு ரஷ்யாவை தண்டிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு இடையில் ரஷ்யாவின் பகுதி அணிதிரட்டல் தொடர்பான ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டதாக அறிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
File Photo
அதில் பேசிய ஜெலன்ஸ்கி, 'உக்ரைனுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்துள்ளது, நாங்கள் நியாயமான தண்டனையை கோருகிறோம். எங்கள் பிரதேசத்தை திருட முயற்சித்ததற்காக, ஆயிரக்கணக்கான மக்களின் கொலைகளுக்கு, பெண்கள் மற்றும் ஆண்களை சித்திரவதைகள், அவமானங்களுக்கு தண்டனையை கோருகிறோம்.
எங்கள் அரசுக்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றத்திற்காக ரஷ்யாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். இந்த போருக்கு ரஷ்யா தனது சொத்துக்களுடன் பணம் செலுத்த வேண்டும்' என தெரிவித்தார்.
Reuters Photo