சொந்த ராசியில் பயணம் செய்யும் சனி.., சிரமங்களை பெறப்போகும் 3 ராசியினர்
நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் எப்போதும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார்.
சனி பகவான், தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணித்து வருகின்றார்.
இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 2025 ஆம் ஆண்டு தான் தனது இடத்தை மாற்றப் போகிறார்.
அந்த வகையில் சனி பகவான் பிப்ரவரி 10ஆம் திகிதி அன்று சதய நட்சத்திரத்தின் மூன்றாம் பாகத்தில் நுழைகின்றார்.
இவருடைய இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு சிரமங்களை கொடுக்கப் போகின்றது.
கடகம்
- மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- தேவையில்லாமல் நேர்மையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
- வியாபாரத்தில் சற்று மந்த சூழ்நிலை ஏற்படும்.
- தொழிலில் நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
- கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
- பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
- பயணங்கள் மேற்கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
- வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்
- தொழிலில் சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும்.
- தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை.
- பல சிந்தனைகளால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
துலாம்
- உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
- விலை உயர்ந்த பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- பெற்றோரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |