மூக்கில் குத்திவிட்டு ஓடிய Zomato டெலிவரி பாய்; இரத்தம் சொட்ட சொட்ட வீடியோ வெளியிட்ட பெண்!
உணவை வழங்க வந்த Zomato டெலிவரி பாய் வாடிக்கையாளறை இரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நகரமான பெங்களூருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர் இரத்தம் சொட்ட சொட்ட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட Hitesha Chandranee என்ற அப்பெண் ஒரு ஒப்பனை கலைஞர் என கூறப்படுகிறது.
அவரது பதிவில், தான் ஆர்டர் செய்த உணவு ஒரு மணிநேரம் தாமதமாக வந்ததாகவும், அதனை புகாரளிக்க வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கும் பொது டெலிவரி எக்ஸிகியூட்டிவ் தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
போனில் புகார் அளித்துக் கொண்டிருக்கும்போது, வீட்டில் சூஷியை (அவரது செல்ல நாய்) வைத்திருந்ததால், கதவை கொஞ்சமாக திறந்து டெலிவரி எக்ஸிகியூட்டிவை காத்திருக்க கூறியுள்ளார்.
பின்னர், ஆர்டர் தாமதமாக வந்ததால், உணவை இலவசமாக டெலிவரி செய்ய வேண்டும் அல்லது ஆர்டரை கேன்சல் செய்து திருப்பி எடுத்துச்செல்லுங்கள் என அவர் கூறியுள்ளார்.
ஆனால், அந்த நபர் முரட்டுத்தனமாக இருந்ததாகவும், கண்டபடி பேசியதாகவும், பின்னர் கதவை இடித்து திறந்து தன்னை மூக்கில் ஓங்கி குத்திவிட்டு ஓடியதாகவும் கூறியுள்ளார்.
இந்த விடீயோவையோ லட்சக்கணக்கான மக்கள் பார்த்த நிலையில், Zomato நிறுவனம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.