மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நின்ற பிரித்தானியர் கைது செய்யப்பட்டது ஏன்?: அருகில் நின்ற நபர் கூறியுள்ள தகவல்...
மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற ஒருவரை பொலிசார் கைது செய்தார்கள்.
மகாராணியார் இறக்கவில்லை என்று கூறி, அவரை சவப்பெட்டியிலிருந்து எழுந்து வரும்படி சொல்லப்போவதாக அவர் கூறியுள்ளார்.
மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற ஒருவரை பொலிசார் கைது செய்து நீதிபதிமுன் ஆஜர் செய்தார்கள்.
அதற்குக் காரணம்?
வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பிரித்தானிய மகாராணியாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, வரிசையில் நின்ற ஒருவரை பொலிசார் அங்கிருந்து அகற்றினார்கள்.
அவரது பெயர் மார்க் (Mark Hague, 52).
நடந்தது என்னவென்றால், வரிசையில் நின்ற மார்க், ’மகாராணியாரை சவப்பெட்டிக்குள்ளிருந்து எழுந்து வரும்படி சொல்லப்போகிறேன், அவர்தான் இறக்கவில்லையே’ என்று கூறியுள்ளார். அவர் பேசுவதை கவனித்த ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மார்க் சொன்னதைக் கேட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், இனி அவரை வரிசையில் நிற்கவைத்தால், சவப்பெட்டியின் அருகில் செல்லும்போது அவர் ஏதாவது பிரச்சினை செய்யக்கூடுமென கருதி பொலிசாரை அழைக்க, மார்க் பொலிசாரிடமும் அருகில் நின்ற பொதுமக்களிடமும் கலாட்டா செய்துள்ளார்.
உடனே பொலிசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
நீதிபதி அவருக்கு 120 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளார்.
அதேபோல மகாராணியாரின் சவப்பெட்டியை நெருங்க முயன்ற Muhammad Khan (28) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: Jeff J Mitchell/Getty Images