மகாராணி மரணம்! அரசு குடும்பம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மீள துயரத்தில் ஜூலு இனம்
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜூலு இனத்தின் மகாராணி Shiyiwe Mantfombi Dlamini Zulu மரணமடைந்ததாக அரச குடும்பம் அறிவித்துள்ளது.
65 வயதான ராணி Shiyiwe Mantfombi Dlamini Zulu தனது கணவர் மன்னர் Goodwill Zwelithini மரணத்திற்குப் பிறகு கடந்த மாதம் நாட்டின் மிகப்பெரிய இனக்குழுவான ஜூலுவின் இடைக்காலத் தலைவரானார்.
குறிப்பிடப்படாத நோயால் பாதிக்கப்பட்ட ராணி ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தென் ஆப்பிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜுலு தேசத்தின் மகாராணி Shiyiwe Mantfombi Dlamini Zulu எதிர்பாராத விதமாக மரணமடைந்ததாக அரச குடும்பம் அறிவித்திருப்பது ஆழ்ந்த அதிர்ச்சி மற்றும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜுலுவின் பிரதமரும் இளவரசர் Mangosuthu Buthelezi அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜூலு தேசத்தில் தலைமை வெற்றிடம் இருக்காது என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
11 மில்லியன் மக்கள் வாழும் தேசத்தின் அடுத்த ஆட்சியாளர் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. மகாராணி Mangosuthu மன்னரின் மனைவிகளிடையே மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றார், ஏனெனில் அவர் அரச குடும்பத்திலிருந்து வந்தார்.
மகாராணி Mangosuthu, மூன்றாம் Eswatini's மன்னரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த மன்னர் Goodwill Zwelithini-க்கும் மகாராணி Mangosuthu-க்கும் ஐந்து மகன்கள் உட்பட எட்டு குழந்தைகள் உள்ளன. அவர்களின் மூத்த மகன், 47 வயதான இளவரசர் Misuzulu, அரியணையை கைப்பற்றுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.