கடற்கரையில் கற்களை பொறுக்கினால் ரூ.2 லட்சம் அபராதம்! அதிரடி உத்தரவு ஏன்?
கடற்கரைகளில் இருந்து கற்களை மக்கள் எடுத்து செல்வதை தடுப்பதற்காக கேனரி தீவுகளில் அபராதம் விதிக்கப்படுகிறது.
கற்களை அள்ளிச் செல்லும் மக்கள்
கடற்கரைகள் மீது காதல் கொள்ளாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது, பொழுதுபோக்கு, மன அமைதி ஆகியவற்றிக்காக பெரும் பாலான மக்கள் கடற்கரைகளுக்கு வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வந்து செல்லும் மக்கள் அங்குள்ள சங்குகள் மற்றும் கூலாங்கற்களை எடுத்து செல்வது வழக்கம்.
ஆனால் கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுரா கடற்கரைகளில் உள்ள கூழாங்கற்களை எடுத்து சென்றால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
பின்னணி காரணம்
ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் இந்த கடற்கரைகளுக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வருகை தரும் பயணிகள் இந்த கடற்கரையில் உள்ள கூலாங்கற்களை அதிக அளவில் எடுத்து செல்கின்றனர்.
இதனால் அங்கு கடுமையான கூழாங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தீவின் அழகும், சுற்று சூழல் அமைப்பும் இதன் மூலம் பாதிக்கப்படுகிறது.
எனவே தான் கடற்கரையில் இருந்து கற்களை எடுத்து செல்லும் நபர்களுக்கு ரூ.13,478 முதல் ரூ.2.69 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |