தென் கொரியா பேட்டரி ஆலையில் அசம்பாவிதம்., 20 பேர் பலி
தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் சியோலுக்கு (Seoul) தெற்கே உள்ள Hwaseong-ல் உள்ள Aricell எனும் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை 10:30 மணியளவில் (உள்ளூர் நேரம்) தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 35,000 யூனிட்கள் கொண்ட கிடங்கில் பேட்டரி செல்கள் வரிசையாக வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் தலைவர் கிம் ஜின்-யங் கூறினார்.
இந்த சம்பவத்தில் இதுவரை 20 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பலத்த காயம் அடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Fire at South Korea lithium battery plant, Aricell battery plant, South Korea