நிலத்தின் கீழே மறைந்து வாழ்ந்த 20,000 மக்கள் - நேரடி வீடியோ
சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னர், 20,000 மக்கள் வாழ்ந்த நிலக்கீழ் நகரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துருக்கி நிலக்கீழ் நகரம்
துருக்கியின் கப்படோக்கியா பிராந்தியத்தில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய வெடிப்பு காரணமாக வழமைக்கு மாறான நில அமைப்புகளுடன் இந்த பிராந்தியம் உள்ளது.

1962 ஆம் ஆண்டில் ஒருவர் வீடு கட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது, நிலத்தின் அடியில் சுரங்கம் இருந்ததை கண்டறிந்து அரசுக்கு தெரியப்படுத்தினார்.
சுரங்கத்தை அரசு மேலும் தோண்டிய போது நிலத்திற்க்கு அடியில் பாரிய நகரம் இருந்ததை கண்டு துருக்கி அரசாங்கம் அதிசயித்தது.
அந்த நிலக்கீழ் நகரம் மிக நேர்த்தியாக 8 அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வாழ்ந்தவர்கள் சுவாசிப்பதற்காக நூற்றுக்கணக்கான துவாரங்கள் உருவாக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 20,000 பேர் வெளியுலக தொடர்பை துண்டித்து அங்கு வசிக்கும் வகையால் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதில், 1000 கிலோ எடையுள்ள கற்கள் கதவுகளாக பயன்படுத்தப்பட்டிருந்தது. உள்ளிருந்து மட்டுமே திறக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தது.
மேலும், வழிபட்டு தலங்கள், ஆடு மாடுகளை அடைத்து வைக்கும் அறைகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த நகரம் சுமார் 4,000 முதல் 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்போது உள்ள நவீன தொழில்நுட்பம் உபகரணங்களை பாவித்து இது போன்ற நகரங்களை உருவாக்க ஓரளவுக்கு சாத்தியமுள்ள நிலையில், 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இந்த நிலக்கீழ் நகரம் மிகத்துல்லியமாக உருவாக்கப்பட்டது என்ற வியப்பு எழுகிறது.
யார் அல்லது எது இந்த நிலக்கீழ் நகரத்தை 8000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது? 20,000 மக்கள் வெளியுலகில் பார்வையில் இருந்து மறைந்து 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிலக்கீழ் நகரத்தில் வாழ வேண்டிய நிர்பந்தம் என்ன?
அண்டை நாட்டு படையெடுப்பிற்கு பயந்து இங்கு வாழ்ந்தால் கூட அவர்களால் சுவாசிப்பதற்காக துவாரங்களை அடைத்து அந்த மக்களை எளிதாக அழித்து விட முடியும். நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடருக்கும் இந்த நிலக்கீழ் நகரம் மிகப்பாதுகாப்பான வகையில் இல்லை.
அப்படியிருக்க இதனை 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மிக நுணுக்கமாக யார் அல்லது எது உருவாக்கியது?, அங்கு மக்கள் வாழ வேண்டிய காரணம் என்ன என்பதை நிலக்கீழ் நகரத்திற்கு நேரடியாக பயணம் செய்த IBC Tamil ஆசிரியர் நிராஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.
மேலதிக தகவலுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |