உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியது!
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பெறுபேறுகளை doenets.lk என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இந்த பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெற்றது.
2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப்பரீட்சையில் 278,196 பாடசாலை மாணவர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி அவர்களுக்கான பல்கலைக்கழக கற்கை நெறிகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |