2025 ம் ஆண்டில் அதிகம் காற்று மாசுபாடு கொண்ட நாடு: முதலிடம் பிடித்த ஆசிய நாடு
உலக அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடாக பாகிஸ்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முதலிடம்
உலக அளவில் சுகாதார மற்றும் காற்றின் தரத்தை கண்காணிக்கும் சுவிட்சர்லாந்தின் IQ Air நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், 2025ம் ஆண்டில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடாக பாகிஸ்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம்(WHO) நிர்ணயித்த பாதுகாப்பு அளவை(PM 2.5) விட 13 மடங்கு அதிகமான நுண்துகள்கள் பாகிஸ்தானில் பதிவாகியுள்ளது.
இந்த நுண்துகள்கள் மனித நுரையீரலுக்குள் ஆழமாக செல்ல கூடிய அபாயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காற்றின் தரத்தை கண்காணிப்பதில் உள்ள சிக்கல்களை அதிகரிக்க செய்வதாக அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்ட 143 நாடுகளில் கிட்டத்தட்ட 130 நாடுகள் உலக சுகாதார நிறுவனம்(WHO) நிர்ணயித்த பாதுகாப்பு அளவை(PM 2.5) எட்ட தவறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த இடங்களை பிடித்த ஆசிய நாடுகள்
பாகிஸ்தானை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பங்களாதேஷ் நாடும், மூன்றாவது இடத்தில் தஜிகிஸ்தான் நாடும் உள்ளது.
அதே சமயம் காற்று மாசுபாடு அதிகம் கொண்ட 25 நாடுகளின் பட்டியலில் தெற்காசிய நாடுகளான இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் லோனி நகரம் உலகின் மிகவும் மோசமான காற்று தரம் கொண்ட நகரமாக அறியப்பட்டுள்ளது.
இங்கு PM 2.5 சராசரி அளவு 112.5 மைக்ரோகிராம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூய்மையான நாடுகள்
IQ Air நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, அவுஸ்திரேலியா, ஐஸ்லாந்து உட்பட 13 நாடுகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனம்(WHO) நிர்ணயித்த பாதுகாப்பு அளவை(PM 2.5) தரநிலையை பூர்த்தி செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் காற்று மாசுபாட்டை அதிகரிக்க செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |