2.1 கோடி ரூபாய் பரிசு! இந்தியரை தீவிரமாக தேடும் அமெரிக்க FBI
இந்தியாவை சேர்ந்த கொலை குற்றவாளி குறித்த தகவலுக்கு அமெரிக்காவின் FBI ரூ.2.1 கோடி பரிசு தொகையை அறிவித்துள்ளது.
ரூ.2.1 கோடி பரிசு தொகையை அறிவித்த FBI
அமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) கொலைக் குற்றச்சாட்டில் இருக்கும் இந்தியாவை சேர்ந்த பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேல் (Bhadreshkumar Chetanbhai Patel) என்பவரை கைது செய்வதற்கான தகவலுக்கு ரூ.2.1 கோடி மதிப்பிலான பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
தற்போது படேல், FBI-யின் 10 தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளார். 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளை பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேல் எதிர்கொள்கிறார்.
மனைவியை கொலை செய்த சேத்தன்பாய் படேல்
2015ம் ஆண்டு அமெரிக்காவில் மேரிலேண்ட் மாநிலத்தின் Hanover பகுதியில் அமைந்துள்ள Dunkin' Donuts கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த தனது மனைவி பாலக்கை(Palak) கொலை செய்ததாக கணவர் படேல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய படேலை அதிகாரிகளால் இதுவரை கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் அவரை கைது செய்யும் நோக்கில் பரிசு தொகை தொடர்பான தற்போதைய அறிவிப்பை FBI வெளியிட்டுள்ளது.
The #FBI offers a reward of up to $250,000 for info leading to the arrest of Ten Most Wanted Fugitive Bhadreshkumar Chetanbhai Patel, wanted for allegedly killing his wife while they were working at a donut shop in Hanover, Maryland, on April 12, 2015: https://t.co/tCZ0Fde7WQ pic.twitter.com/GGLK4dBLhA
— FBI Most Wanted (@FBIMostWanted) April 12, 2024
சேத்தன்பாய் படேல் குறித்த விவரங்களுக்கு
இந்த வழக்கை FBI மிகவும் தீவிரமாக கையாண்டு வருவதை இந்த கணிசமான பரிசுத் தொகை எடுத்துக் காட்டுகிறது.
குற்றவாளியின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்திருப்பவர்களை முன்வர ஊக்குவிப்பதே இந்த பெரும் தொகையின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
சேத்தன்பாய் படேல் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள FBI இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சேத்தன்பாய் படேலை கைது செய்வதற்கு உதவும் தகவல் ஏதேனும் கிடைத்தால், உடனடியாக FBIயை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |