இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள்!
இஸ்ரேல் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் இந்திய தலைநகர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
ஒரு வாரமாக இஸ்ரேல் ஹமாஸ் போராளிக்குழுவிற்கு இடையே போர் நடந்து வருகிறது.
மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவும், ஹமாஸ் குழுவிற்கு லெபனான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில் தமிழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இஸ்ரேலில் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்டுவர ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியது.
PTI
தமிழர்கள் மீட்பு
இந்த நடவடிக்கையில் தற்போது முதற்கட்டமாக 212 இந்தியர்கள் மீட்பு விமானம் மூலம் இந்திய தலைநகர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களில் 21 பேர் தமிழர்கள். டெல்லியில் உள்ள தமிழர்கள் சென்னை, கோவைக்கு அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர். 14 பேர் சென்னைக்கும், 7 பேர் கோவைக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |