புலம்பெயர்ந்தோரால் நிகழ்ந்த சாதனை: ஒரே படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்த 230 பேர்
Record 230 migrants cross channel in single Boat: 230 பேர் ஒற்றை படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான புதிய சாதனை நிகழ்ந்துள்ளது.
சாதனை
பிரான்சிலிருந்து புறப்பட்ட ஒரு பெரிய படகில் 230 பேர் ஒரே நேரத்தில் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர்.

திங்கள்கிழமை அதிகாலை, பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்த படகை தடுத்து கரைக்கு அழைத்துச் சென்றனர். இது கடந்த மாதம் 165 பேர் கடந்த சாதனையை முறியடித்துள்ளது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது,
மனிதக் கடத்தல் கும்பல்கள் “பாதுகாப்பற்ற படகுகளில் அதிகமானவர்களை நிரப்பி அனுப்புவதால்” உயிர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் 173 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு இயந்திரம் தீப்பற்றியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பிரித்தானிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த சம்பவம், குற்றவியல் கும்பல்கள் பயன்படுத்தும் ஆபத்தான முறைகளை வெளிப்படுத்துகிறது. அவர்கள் உயிர்களை ஆபத்துக்குள் தள்ளுகின்றனர். ஆனால், சிறிய படகுகள் மூலம் வரும் புலம்பெயர்ந்தோர் இந்த ஆண்டில் குறைந்துள்ளனர். ஜூலை மாதத்தில் 2020-க்கு பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசு, பிரான்ஸ் கடற்கரையில் 40 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுவரை 2026-ஆம் ஆண்டில் 14,819 பேர் பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடும்போது 43 சதவீதம் குறைவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |