பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்: பிரமிக்க வைத்த எண்ணிக்கை
2,50,000 பொதுமக்கள் பிரித்தானிய ராணிக்கு அஞ்சலி.
துல்லியமான எண்ணிக்கையை அரசு திரட்டி வருவதாக நாட்டின் கலாச்சார செயலர் அறிவிப்பு.
பிரித்தானியாவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடலுக்கு சுமார் 2,50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டு இருப்பதாக நாட்டின் கலாச்சார செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் பால்மோரலில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் வைக்கப்பட்டது.
SKY NEWS
கடந்த புதன்கிழமை பிற்பகுதியில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்ட பிரித்தானிய மகாராணியின் பூத உடலை ராணியின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளான நேற்று காலை 6:30 வரை பொதுமக்கள் 24 மணிநேரமும் பார்வையிட்டனர்.
ராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நின்ற பொதுமக்கள் வரிசை நாடாளுமன்றத்திலிருந்து தேம்ஸ் நதியின் தென் கரை வழியாக டவர் பாலத்தைத் தாண்டி சவுத்வார்க் பூங்கா வரை நீண்டு காணப்பட்டது.
SKY NEWS
இந்நிலையில், வெஸ்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்ட பிரித்தானிய மகாராணிக்கு 2,50,000க்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தி இருப்பதாக நாட்டின் கலாச்சார செயலர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மிச்செல் டோனெலன் ஸ்கை நியூஸிடம் தெரிவித்த தகவலில், ராணியின் உடலுக்கு கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அஞ்சலி செலுத்தி இருப்பதாகவும், ஆனால் இது தோராயமான எண்ணிக்கை என்றும், அரசாங்கம் இன்னும் இறுதி எண்களை கணக்கிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
SKY NEWS
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனின் தொடர் தாக்குதலுக்கு பயந்து பின்வாங்கிய ரஷ்யா: பிரித்தானிய உளவுத் துறை வழங்கிய முக்கிய தகவல்
இதையடுத்து ஹைட் பார்க்கில் 80,000 பேரும், சடங்கு பார்க்கும் பகுதிகளில் 75,000 பேரும், சவுத் கேரேஜ் டிரைவில் 60,000 பேரும் இருந்ததாக லண்டன் மேயர் தெரிவித்தார், மேலும் தேம்ஸ் பள்ளத்தாக்கு 100,000 பேர் வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.