உக்ரைனின் தொடர் தாக்குதலுக்கு பயந்து பின்வாங்கிய ரஷ்யா: பிரித்தானிய உளவுத் துறை முக்கிய தகவல்
கிரிமியாவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பலை பின்னகர்த்திய ரஷ்யா.
ரஷ்யாவின் அடிப்படை பாதுகாப்பு முடக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்.
ரஷ்யா தனது KILO-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை கிரிமியாவில் உள்ள உள்நாட்டு துறைமுகத்திலிருந்து தெற்கு ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடர் கிராயில் (Krasnodar Krai) துறைமுகத்திற்கு நகர்த்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தனது எதிர்ப்பு தாக்குதலை கடந்த சில வாரங்களாக தீவிரமாக முன்னகர்த்தி வருகிறது.
இந்த தாக்குதலால் உக்ரைனின் வடகிழக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு ரஷ்ய ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை உக்ரைனிய ராணுவம் விடுவித்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட உளவுத் துறை அறிக்கையில், KILO-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை கிரிமியாவில் உள்ள உள்நாட்டு துறைமுகத்திலிருந்து தெற்கு ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடர் கிராயில் துறைமுகத்திற்கு நகர்த்த ரஷ்யா முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் கடற்படை தலைமையகம் மற்றும் அதன் முக்கிய கடற்படை மீதான தாக்குதல்கள் விமான விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை தீவிரமடைந்து வருகிறது.
மேலும் தற்போது உக்ரைனின் நீண்ட தூர தாக்குதல் திறன் அதிகரித்ததன் காரணம் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டத்தில் ஏற்பட்ட சமீபத்திய மாற்றம் போன்ற காரணங்களால் ரஷ்யா இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: அரச முடியாட்சிக்கு எதிர்ப்பு: ராணியின் மரணத்தை குறிக்கும் வகையில் சவப்பெட்டியை ஆற்றில் வீசிய போராட்டக்காரர்கள்
உக்ரைனுக்கு எதிரான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்யாவின் அடிப்படை பாதுகாப்பு முடக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.