தைவானில் 350 பயணிகளுடன் வேகமாக வந்த ரெயில் பயங்கர விபத்து - 36-பேர் உயிரிழப்பு !
தைவானின் தை துங் நகருக்கு ஹூலியன் நகரில் வேகமாக 350 பயணிகளுடன் பயணித்து வந்த ரெயில் ஒன்று சுரங்கப்பாதை கடக்க முயன்றபோது டிரக் ஒன்றின் மீது மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பயணம் செய்த 36 பேர் உயிரிழந்ததாகவும் 72 பேர் காயம் அடைந்ததாகவும், 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இதனை தொடர்ந்து ரெயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முதல் கட்ட விசாரணையில் தடம் புரள காரணமாக இருந்த டிரக், உரிய முறையில் பார்க் செய்யப்படமால் இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமின்றி விபத்துக்குள்ளான ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் தங்கள் உடமைகளுடன் தண்டவாளத்தில் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி வருகின்றன.
மேலும் தைவானில் சமீப காலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய ரெயில் விபத்து இதுதான் என்று கூறப்படுகின்றது.

