2018 முதல் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்.., கனடாவில் தான் அதிகம்
2018 -ம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் உள்ள 403 இந்திய மாணவர்கள் மரணம் அடைந்திருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இந்திய மானவர்கள்
இந்திய நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்புக்காக வெளிநாடுகளை நோக்கிச் செல்கின்றனர். அங்கு அவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு தான் இந்திய மாணவர்கள் எவ்வளவு எண்ணிக்கையில் வெளிநாடுகளில் படிக்கின்றனர் என்பது தெரியவந்தது.

உணவகத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: 60,000 டொலருக்கு வந்த கட்டண ரசீது
இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
403 இந்திய மாணவர்கள் மரணம்
இதுகுறித்த தகவலை மக்களவையில் இந்திய அமைச்சர் வி.முரளீதரன் பேசுகையில், "கடந்த 2018 ம் ஆண்டு முதல் 403 இந்திய மாணவர்கள் மரணமடைந்துள்ளனர்.
அவர்களில், கனடாவில் அதிகபட்சமாக 91 பேரும், பிரிட்டனில் 48 பேரும், ரஷியாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், அவுஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரைனில் 21 பேரும், ஜேர்மனியில் 20 பேரும், சைபிரஸில் 14 பேரும், இத்தாலியில் 10 பேரும், பிலிப்பைன்ஸில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு இந்திய அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |