லண்டனிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட குழப்பம்
லண்டனிலிருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்றில் ஐந்து பயணிகளும், இரண்டு பணியாளர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குழப்பம் உருவானது.
ஏழு பேருக்கு உடல் நல பாதிப்பு
நேற்று, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் மும்பை நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.
சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக ஐந்து பயணிகளுக்கும், இரண்டு விமானப் பணியாளர்களுக்கும் மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.
விமானத்துக்குள் காற்றழுத்தம் குறையத் துவங்கியதைத் தொடர்ந்து அவர்களுக்கு இந்த மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டிருக்கலாம் என சில பணியாளர்கள் கூறியுள்ளார்கள்.
விமானம் மும்பையில் தரையிறங்கியதும், அங்கு தயாராக காத்திருந்த மருத்துவ உதவிக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சையளித்துள்ளார்கள்.
ஆனால், சிகிச்சைக்குப் பின்பும் இரண்டு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |