காசா மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதல்: கொல்லப்பட்ட 50 பிணைக் கைதிகள்
காசா நகர் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதலில் 50 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர்.
அத்துடன் காசா எல்லையில் நடந்த இசை நிகழ்ச்சியை குறி வைத்து தாக்கிய ஹமாஸ் படையினர் நூற்றுக்கணக்கானோரை கொன்றதுடன், வெளிநாட்டினர் மற்றும் இஸ்ரேலியர்கள் என நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
Reuters
இதையடுத்து சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து தங்களிடம் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்தவர்களில் இரண்டு அமெரிக்கப் பெண்கள், இரண்டு இஸ்ரேல் பெண்கள் என நான்கு பேரை ஹமாஸ் படையினர் விடுத்தனர்.
50 பிணைக் கைதிகள் உயிரிழப்பு
இந்நிலையில் ஹமாஸ் சமீபத்தில் தெரிவித்துள்ள தகவலில், காசா நகர் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதலில் 50 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
#Hamas said 50 hostages were killed allegedly because of Israeli army shelling of the Gaza Strip
— NEXTA (@nexta_tv) October 26, 2023
Earlier, the terrorists reported the death of 21 hostages for the same reason. It is known that the terrorists kidnapped more than 200 people. pic.twitter.com/enHnq9nqJb
இதற்கு முன்னதாக இதே காரணத்தை குறிப்பிட்டு 21 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |