உணவு தானியங்களுடன் வெளியேறிய 7 சரக்கு கப்பல்கள்: இதுவரை 4.8 மில்லியன் டன் ஏற்றுமதி
1,46,000 உக்ரைனிய தானியங்களுடன் வெளியேறிய 7 சரக்கு கப்பல்கள்.
இதுவரை மொத்தமாக உக்ரைனில் இருந்து 4.8 மில்லியன் டன் தானியம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி
உக்ரைனின் ஒடேசா மாகாணத்தில் இருந்து தானியங்களை ஏற்றிக் கொண்டு மேலும் 7 சரக்கு கப்பல்கள் வெளியேறியதாக அந்த நாட்டின் உள்கட்டமைப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே ஏற்பட்ட போர் நடவடிக்கைகளை தொடர்ந்து, உக்ரைனில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டி இருந்த உணவு தானியங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனால் உலக அளவில் உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டு கடுமையான வாழ்க்கை செலவு நெருக்கடியை பொதுமக்கள் சந்திக்க தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இணைந்து உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் பிற நாடுகளுக்கான உக்ரைனிய தானியங்கள், சரக்கு கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஜூலை 22ம் திகதி முதல் உக்ரைனில் இருந்து இதுவரை 220 கப்பல்கள், தானியங்களை ஏற்றிக் கொண்டு உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளது.
வெளியேறிய 220 கப்பல்களில் 4.8 மில்லியன் டன் தானியங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
⚡️ Infrastructure Ministry: 7 more cargo ships leave Odesa Oblast.
— The Kyiv Independent (@KyivIndependent) September 25, 2022
The seven vessels are carrying over 146,000 tons of grain. Almost 220 ships carrying 4.8 million tons of Ukrainian grain have left Ukrainian ports since Kyiv and Moscow signed the UN-backed grain deal on July 22.
இந்நிலையில், இன்று உக்ரைனின் ஒடேசா மாகாணத்தில் இருந்து தானியங்களை ஏற்றிக் கொண்டு மேலும் 7 சரக்கு கப்பல்கள் வெளியேறியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: Uk டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி: 171 மில்லியன் பவுண்டுகள் ஜாக்பாட் வெற்றி!
இதன் மூலம் கூடுதலாக 1,46,000 டன் தானியங்கள் உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.