சகோதரனை துப்பாக்கியால் சுட்ட 10 வயது சிறுவன்: டெக்சாஸில் அரங்கேறிய பயங்கரம்
டெக்சாஸில் சிறுவனை கொன்ற 10 வயது சகோதரன்.
நாட்டு துப்பாக்கி யாருடையது என்பது தெரியவில்லை என பொலிஸார் தகவல்.
டெக்சாஸில் வீட்டில் இருந்த துப்பாக்கியால் 8 வயது சிறுவனை தற்செயலாக அவனது 10 வயது சகோதரன் சுட்டுக் கொன்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸில் பிற்பகல் 3 மணியளவில் 8 வயது சிறுவனை தற்செயலாக அவனது 10 வயது சகோதரன் வீட்டில் இருந்த துப்பாக்கியால் தற்செயலாக சுட்டுக் கொன்றதாக ஹாரிஸ் கவுண்டி ஷெரீப் எட் கோன்சலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த துப்பாக்கி சூடு நடந்த போது இரண்டு சிறுவர்களுடன் சேர்த்து 13 வயதுடைய அவரது மூத்த சகோதரரும் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த துப்பாக்கி சூட்டில் ஒரே ஒரு ஷாட் மட்டுமே சுடப்பட்டதாகவும், குழந்தையின் மேல் உடற்பகுதியில் அடிபட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுடனான மோதலை தீர்க்க ரஷ்யா தயாராக உள்ளது: செர்ஜி லாவ்ரோவ் அறிவிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பம் சமீபத்தில் ஹூஸ்டன் பகுதிக்கு குடிபெயர்ந்ததாகவும், குழந்தைகளுக்கு பள்ளிகள் இல்லை என்றும் அந்த நாட்டு துப்பாக்கி யாருடையது என்பது தெரியவில்லை எனவும் கோன்சலஸ் கூறினார்.
இதையடுத்து விசாரணை நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார்.