400 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறும் கல்வீச்சு திருவிழா - 934 பேர் காயம்; பின்னணியில் காதல் கதை

Madhya Pradesh
By Karthikraja Aug 24, 2025 02:12 PM GMT
Report

 400 ஆண்டுகளாக நடைபெறும் கல்வீச்சு திருவிழாவில் 934 பேர் காயமடைந்துள்ளனர்.

கோட்மார் திருவிழா

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பந்தூர்ணா மாவட்டத்தில், 400 ஆண்டுகளுக்கு மேலாக கல்வீசும் கோட்மார்(Gotmar) திருவிழா நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் நேற்று கோட்மார் திருவிழா நடைபெற்றது. 

Gotmar stone pelting festival madhya pradesh

ஜாம் ஆற்றின் இருபுறத்திலும் உள்ள பாண்டுர்னா மற்றும் சவர்காண் கிராமத்தை சேர்ந்த 60,000 க்கும் அதிகமான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

பாரம்பரியப்படி, சவர்காண் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் காவ்லே என்பவரின் குடும்பத்தினர், காட்டில் இருந்து பலாஸ் மரம் ஒன்றைக் கொண்டு வந்து ஆற்றில் நட்டி, அதன் உச்சத்தில் ஒரு கொடியை ஏற்றினர். 

இந்தியாவின் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு - தமிழக முதல்வர் ஸ்டாலின் சொத்துமதிப்பு என்ன?

இந்தியாவின் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு - தமிழக முதல்வர் ஸ்டாலின் சொத்துமதிப்பு என்ன?

அங்குள்ள சாண்டி மாத கோவிலில் நடைபெற்ற பூஜைகளுக்கு பின்னர், திருவிழா தொடங்கியது.

பாண்டுர்னா மக்கள் கொடியை அகற்ற முன்னோக்கி வர, சவர்காண் கிராம மக்கள் அவர்கள் மீது கல்வீசி தாக்க தொடங்கினர்.

934 பேர் காயம்

மாறி மாறி கல் வீசி தாக்கியதில், 934 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 10 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, இருவருக்கு கை கால்கள் உடைந்துள்ளது. 

400 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறும் கல்வீச்சு திருவிழா - 934 பேர் காயம்; பின்னணியில் காதல் கதை | 934 Injured In Mp Gotmar Stone Pelting Festival

கோட்மார் திருவிழாவை முன்னிட்டு அந்த பகுதியில், 58 மருத்துவர்கள், 200 மருத்துவ ஊழியர்கள் அடங்கிய 12 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன.

சட்ட ஒழுங்கை பாதுகாக்க 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அங்கு குவிக்கப்பட்டனர். மேலும், ட்ரோன்கள் மூலம் திருவிழா கண்காணிக்கப்பட்டது. 

4 நிறங்களில் பாஸ்போர்ட் வழங்கும் இந்திய அரசு - என்ன வேறுபாடு?

4 நிறங்களில் பாஸ்போர்ட் வழங்கும் இந்திய அரசு - என்ன வேறுபாடு?

இந்த திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்தனர். அருகே உள்ள வீடுகளின் மாடியில் ஏறி இந்த திருவிழாவை பார்வையிட்டனர். 

Gotmar stone pelting festival madhya pradesh

1995 முதல் 2023 வரை இந்த திருவிழாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பலரும் பார்வை மற்றும் கை கால்களை இழந்துள்ளனர்.

பின்னணியில் காதல் கதை

இந்த திருவிழாவின் பின்னணியில் ஒரு காதல் கதை உள்ளது.

சவர்காண் கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண்ணும், பாண்டுர்னா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ரகசியமாக திருமணம் செய்த கொண்ட இருவரும், அங்கிருந்து ஜாம் ஆற்றின் வழிய அந்த பெண்ணை அழைத்து செல்ல இளைஞர் முயற்சித்துள்ளார்.

ஆற்றில் கழுத்தளவு நீர் சென்றதால், அந்த இளைஞன் பெண்ணை முதுகில் தூக்கிக்கொண்டு சென்றுள்ளான்.

இதனை அறிந்த சவர்காண் கிராம மக்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தகவலறிந்த பாண்டுர்னா கிராம மக்களும் கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில், அந்த காதலர்கள் இருவரும் ஆற்றிலே உயிரிழந்துள்ளனர். 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் - பாராசூட் சோதனை வெற்றி

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் - பாராசூட் சோதனை வெற்றி

காதலர்கள் இறந்ததை அவமானமாக கருதிய இரு கிராம மக்களும், உடல்களை எடுத்து சாண்டி கோவிலின் முன் வைத்து பூஜை செய்து, பின்னர் தகனம் செய்தனர்.

இதன் நினைவாக 400 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கல் வீசும் கோட்மார் திருவிழா நடைபெற்று வருகிறது.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US