ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது சிறிய விபத்து - 133 பயணிகளின் நிலை என்ன?
ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது கடினமான தரையிறக்கத்தை மேற்கொண்டு சிறிய விபத்தில் சிக்கியுள்ளது.
ஏர் இந்தியா விமானம் விபத்து
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம், இன்று காலை 6:42 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து, 133 பயணிகளுடன் தாய்லாந்தின் புக்கெட் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது.
இந்த விமானம், புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, முன்பக்க சக்கரத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஓடுதளத்தில் கடினமான தரையிறக்கத்தை மேற்கொண்டு சிறிய விபத்தில் சிக்கியுள்ளது.
HARD LANDING grounds Phuket Airport & closes runway
— RT (@RT_com) March 11, 2026
Air India Express seen in a ROUGH touch down 'suffered nose wheel issue' — reports pic.twitter.com/fbTkXMxVme
இதில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. விமானத்தில் 2 குழந்தைகள் உட்பட 133 பயணிகள் பயணித்த நிலையில், அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டனர்.
All passengers safe after Air India Express plane’s hard landing disrupts Phuket Airport
— Thai Enquirer (@ThaiEnquirer) March 11, 2026
All passengers and crew were reported safe after an Air India Express aircraft made a hard landing at Phuket International Airport on Wednesday, damaging its nose landing gear and forcing… pic.twitter.com/mRqcUBkgH3
விமானத்தின் முன்பக்க சக்கரம் உடைந்துள்ளதால், அந்த விமானத்தை ஓடுதளத்தில் அகற்ற முடியாத நிலை உள்ளது.

இதனை தொடர்ந்து அந்த ஓடுதளம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
ஓடுதளத்தின் நிலைமை குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |