புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து இதுவரையிலும் 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா விமானத்தில் 61 வெளிநாட்டவர்கள் பயணம் செய்ததாகவும், அதில் 53 பேர் பிரித்தானியர்கள், 7 பேர் போர்த்துகீசியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.
பிரதமர் மோடி இரங்கல்
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையை தருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இரங்கல்
விமான விபத்து மீட்பு பணிகளில் அரசுடன் இணைந்து உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தங்களால் முடிந்த அளவு அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முதல் இணைப்பு- ஏர் இந்தியா விமானம் விபத்து- தீப்பற்றி எரியும் காட்சிகள்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் சில நிமிடங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டு சென்ற Air India விமானம் (Flight AI171) இன்று (ஜூன் 12) மதியம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனி நகரில் விழுந்தது.
விமானம் விழுந்ததும் கடும் புகை மேகனி நகரம் முழுவதும் பறந்தது. அருகில், வாஸ்தராபூரிலிருந்து கூட புகை தென்பட்டதாகவும், அதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விமானம் மக்கள் நடமாட்டம் அதிகமான ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீயணைப்பு படை, அவசர மருத்துவ அணிகள் உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளும் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.
தற்போது வரை உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் பற்றிய அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சம்பவம் குறித்து குஜராத் முதல்வர் மற்றும் பொலிஸ் கமிஷனரிடம் நேரில் பேசியுள்ளார். மத்திய அரசின் முழுமையான ஆதரவும் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
Air India வெளியிட்ட அறிக்கையில், "இன்று ஜூன் 12, 2025, ஏ.ஐ.171 விமானம் விபத்தில் ஈடுபட்டது. முழு விவரங்கள் விரைவில் பகிரப்படும்," என தெரிவித்துள்ளது.
Air India's AI171 (Ahmedabad- London) with around 242 passengers on board has reportedly crashed near #Ahmedabad (AMD) airport during take off. #AirIndia #PlaneCrash pic.twitter.com/J5sDtzxZis
— The-Pulse (@ThePulseIndia) June 12, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |