பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார்

Royal Family Buckingham Palace Epstein Files
By Arbin Feb 21, 2026 03:22 AM GMT
Report

பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ரகசியமாக பெண்களை அழைத்து வந்த ஆண்ட்ரூ தொடர்பில் புகாரளித்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரை லண்டன் பொலிசார் மிரட்டியுள்ளனர்.

வாரத்திற்கு பலமுறை

பிரித்தானிய அரச குடும்பத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியே, தற்போது இதை வெளிப்படுத்தியுள்ளார். வாரத்திற்கு பலமுறை பெண்களை அரண்மனைக்குள் ஆண்ட்ரூ அனுமதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் | Andrew Women To Buckingham Palace

கடந்த 1998 முதல் 2004 வரையில் ஆண்ட்ரூவின் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டவர் பால் பேஜ். ஆனால், ஆண்ட்ரூவைப் பார்க்க வந்த பெண்களின் பெயர்களை அறிய இவர் அனுமதிக்கப்படவில்லை என்றே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வாரம் அவர் Thames Valley காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு அவர்களின் விசாரணைக்கு உதவ முன்வந்துள்ளார். எப்ஸ்டீன் கோப்புகள் வெளிச்சத்திற்கு வந்ததன் பின்னர், Mrs Windsor என்ற ரகசிய அடையாளத்துடன் பெண் ஒருவர் ரகசியமாக பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்தது அம்பலமானது.

எப்ஸ்டீனின் Lolita Express விமானத்திலேயே தொடர்புடையப் பெண் லண்டனுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது உண்மையை உடைத்த பேஜ், தலைநகரின் காவல்துறையிடமிருந்து தனக்கு மிரட்டல் வந்ததாக வெளிப்படுத்தியுள்ளார்.

அரண்மனை இரகசியங்கள் கசியலாம்... ஆண்ட்ரூ தொடர்பில் கடும் நெருக்கடியில் அரச குடும்பம்

அரண்மனை இரகசியங்கள் கசியலாம்... ஆண்ட்ரூ தொடர்பில் கடும் நெருக்கடியில் அரச குடும்பம்

Jon Savell என்ற அதிகாரியே, கடிதம் ஊடாக எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள தனது தனிப்பட்ட மாளிகையில் ஆண்ட்ரூ அடையாளம் தெரியாத பெண்களை ரகசியமாக அழைத்து வந்துள்ளார் என்பவதை பேஜ் வெளிப்படுத்தியதன் பின்னரே Jon Savell எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் பாதுகாக்கப்பட்டவர்களின் தனியுரிமை மற்றும் அந்தரங்கத்தை மதிக்க வேண்டும் என்பது அவரது கடமை என நினைவூட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த கடிதம் தம்மை மிகுந்த பணிவுடன் மிரட்டுவதாகவே தாம் உணர்ந்ததாக பேஜ் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு மீறல்கள்

ஆனால், ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதன் பின்னர், அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு லண்டன் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே, லண்டன் விமான நிலையங்கள் எப்ஸ்டீன் தொடர்பில் மனித கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உதவ பயன்படுத்தப்பட்டதா என்பதை நிறுவ அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக ஸ்காட்லாந்து யார்டு தெரிவித்துள்ளது.

1997 மற்றும் 2003 க்கு இடையில் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ தனிப்பட்ட முறையில் பெண்களை அழைத்து வந்தது தொடர்பாக பல பாதுகாப்பு மீறல்கள் இருந்ததாகவும் பேஜ் கூறியுள்ளார்.

பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் | Andrew Women To Buckingham Palace

மட்டுமின்றி, அரச குடும்பத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகளாக செயல்படுபவர்கள் சூதாட்டம், மதுபோதை என சீரழிந்த கலாச்சாரத்தை பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள ஒரு லாக்கர் அறையில் இருந்து பேஜ் நடத்திய 3 மில்லியன் பவுண்டுகள் முதலீட்டு மோசடி தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, ​​பேஜ் முதன்முதலில் ஆண்ட்ரூ தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மிரட்டல் வேண்டாம்... சீனாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த தகைச்சி

மிரட்டல் வேண்டாம்... சீனாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த தகைச்சி

இந்த நிலையில், பேஜின் குற்றச்சாட்டுகளை பெருநகர காவல்துறை ஒருபோதும் முழுமையாக விசாரிக்கவில்லை என்றும், மோசடி குற்றத்திற்காக அவர் மீதான தண்டனை அவரை நம்பகத்தன்மையற்றவராக மாற்றியதாகக் கூறியுள்ளது.

இருப்பினும், தமது குற்றச்சாட்டுகளை பேஜ் தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US