தேனிலவின்போது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்: பரோல் கிடைத்ததும் குற்றவாளி செய்த செயல்
தேனிலவின்போது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த குற்றவாளி, பரோலில் வந்ததும் செய்த செயல் பலரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது.
தேனிலவுக்கு சென்றபோது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்
இந்திய வம்சாவளியினரான Anni Dewani (28) தன் கணவர் Shrien Dewani (40)உடன் தென்னாப்பிரிக்காவுக்கு தேனிலவுக்கு சென்றிருந்தபோது, அவர்களை வழிமறித்த இருவர் Anniயைக் கடத்தி சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக Anni பயணித்த காரின் சாரதியான Zola Tongo (39), மற்றும் கடத்தல்காரர்கள் Mngeni மற்றும் Qwabe என்னும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், Anniயின் கணவர்தான் அவரைக் கொல்வதற்கு தங்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட மூவரும் கூற, ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் கிடைக்காததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் Shrien.
Anni பயணித்த காரை செலுத்திய சாரதி Tongoவுக்கு 18 ஆண்டுகளும், Mngeni மற்றும் Qwabeக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில், Mngeni சிறையிலேயே மூளைப்புற்றுநோயால் இறந்துபோனார்.
Credit: Handout
பரோலில் வந்த குற்றவாளி செய்த செயல்
இந்நிலையில், 18 ஆண்டுகள் தண்டனை பெற்ற Tongo, நன்னடத்தை காரணமாக சிறையிலிருந்து பாதி தண்டனைக்காலத்திலேயே விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பரோலில் வந்ததும் Tongo செய்த செயல் பலரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது.
ஆம், Anni கொல்லப்பட்ட 12ஆவது நினவுநாளன்று, அவரது உடல் வீசப்பட்ட இடத்துக்கு, அதாவது Anniயைக் கொன்று அவரது உடலை வீசிய இடத்துக்குச் சென்ற Tongo, அந்த இடத்தில் மலர்ச்செண்டு வைத்து Anniக்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது கண்ணீர் விட்டு அழுத Tongo, நான் செய்த தவறை ஒப்புக்கொள்வதற்கு அடையாளமாக நான் முதல் முறை இங்கு வந்துள்ளேன்.
நான் செய்த விடயம் தினமும் என் மனதிலேயே இருக்கிறது. நான் Anniயின் தந்தையிடம், Anniயைக் கொலை செய்ததில் எனது பங்களிப்புக்காக வருந்துவதாகக் கூறவிரும்புகிறேன்.
அவருக்கு தீர்க்காயுசும் நிம்மதியும் கிடைக்கட்டும். எனது குற்றத்துக்கு பொறுப்பேற்றுக்கொள்ளவும் Anniயின் குடும்பத்துக்கு என்னால் ஏற்பட்ட இழப்பை மறக்காமல் இருக்கவும் நான் முயற்சி செய்கிறேன் என்றார்.
இதற்கிடையில், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கையோடு ஒரு ஆண் நண்பரை திருமணம்
செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் Anniயை திருமணம் செய்திருந்த
ஓரினச்சேர்கையாளரான Shrien.