அவுஸ்திரேலியவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அசம்பாவிதம்- எரிபொருள் பற்றாக்குறை அச்சம்
அவுஸ்திரேலியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம், மெல்போர்னுக்கு அருகே உள்ள Viva Energy சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தொடர் வெடிப்புகள் மற்றும்தீ விபத்து, நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரில் 15 இரவு ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக தீப்பற்றியதில், 60 மீற்றர் உயரம் வரை தீப்பிழம்புகள் எழுந்தன.
இது அவுஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும்.

தினசரி 1,20,000 பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை, நாட்டின் மொத்த எரிபொருள் தேவையின் 10 சதவீதம் அளவிற்கு வழங்குகிறது வழங்குகிறது.
ஆற்றல் துறை அமைச்சர் கிரில் போவென், இந்த தீ விபத்து பெட்ரோல் உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இது சரியான நேரம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெட் எரிபொருள் மற்றும் டீசல் உற்பத்தி பிரிவுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தற்போது 38 நாட்களுக்கு மட்டுமே போதுமான பெட்ரோல் இருப்பு உள்ளது. இது சர்வதேச ஆற்றல் அமைப்பு பரிந்துரைத்த 90 நாள் அளவை விட மிகவும் குறைவானதாகும்.
இந்நிலையில், மக்கள் தேவையான அளவிற்கு மட்டுமே எரிபொருள் வாங்க வேண்டும், பீதியில் அதிகமாகி வாங்கி பதுக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த தீ விபத்து, ஏற்கெனவே மத்திய கிழக்கில் நடந்துவரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Australia refinery explosion 2026, Viva Energy Geelong fire, Australia petrol shortage news, Chris Bowen refinery statement, global oil supply crisis #AustraliaRefinery #FuelSupply #PetrolCrisis #VivaEnergy #OilMarket #EnergyNews #Melbourne