இந்தியாவில் வெளிநாட்டுப் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்! அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி உறுதி
இந்தியாவில் வெளிநாட்டுப் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யலாம் என அவுஸ்திரேலிய பெண் சுற்றுலா பயணி கருத்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி உறுதி
இந்தியாவில் தனியாகப் பயணம் செய்யும் வெளிநாட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 24 வயது பெக் மெக்கோல் மறுத்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குத் தனியாகச் சுற்றுலா சென்ற அவர், தனது அனுபவங்களை வீடியோவாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
பெக் மெக்கோலின் அனுபவங்கள்
"வெளிநாடுகளில் இருந்து தனியாக இந்தியாவுக்கு வரும் இளம் பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகப் புகார் கூறப்படுகிறது. நான் தனியாக இந்தியாவுக்குச் சுற்றுலா புறப்பட்டபோது என்னிடமும் இதே கருத்தை பலர் கூறினர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை. நான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இரவில் தனியாக நடந்து சென்றுள்ளேன். எனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனது பயணங்கள் இனிமையாக அமைந்தன.”
"இந்திய உணவு வகைகள் உடல்நலனுக்கு ஏற்றவை கிடையாது, அவற்றில் மசாலா வகைகள் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் என்றும் சிலர் கூறினர்.
ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்திய உணவு வகைகள் மிகவும் ருசியாக உள்ளன. குறிப்பாக, சைவ உணவு வகைகள் மிகவும் சுவையாக உள்ளன. இப்போது இந்திய உணவு வகைகளுக்காக நான் ஏங்குகிறேன்.”
"இந்தியாவில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான நகரங்கள், யுனெஸ்கோ புராதன சின்னங்களைப் பார்த்து வியந்தேன். இந்த நேரத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு சில அறிவுரைகளை கூற விரும்புகிறேன்.
இந்தியாவில் பாதுகாப்பாகப் பயணம் செய்யலாம். இந்தியாவின் வரலாறு நம்மை வியக்க வைக்கிறது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |