மரியுபோல் எஃகு ஆலை மீது மீண்டும் சரமாரி தாக்குதல்! வீடியோ ஆதாரம்
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள எஃகு ஆலை மீது மீண்டும் சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, மரியுபோலில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
மரியுபோல் நகரில் பெரும்பாலான பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில், அந்நகரில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் உக்ரேனிய வீரர்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்தனர்.
அசோவ்ஸ்டல் ஆலை, மரியுபோல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலிருந்து கிட்டதட்ட 500 பேர் 2 முறை வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டதாக ஐ.நா பொதுச் செயலாளர் António Guterres உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம், தற்போது அசோவ்ஸ்டல் ஆலையில் சிக்கியிருக்கும் உக்ரேனிய வீரர்களும் மற்றும் பொதுமக்களை வெளியேற்ற ஒரு புதிய முயற்சி நடந்து கொண்டிருப்பதாக ஜெலன்ஸ்கி அலுவலகம் தெரிவித்துள்ளது.
#Azovstal in #Mariupol is under attack again. pic.twitter.com/9u5GwFCM7M
— NEXTA (@nexta_tv) May 6, 2022
இஸ்ரேலிடம் மன்னிப்பு கேட்ட புடின்!
இதனிடையே, 2வது நாளாக அசோவ்ஸ்டல் ஆலை மீதான தாக்குதலை ரஷ்ய படையினர் நடத்தி வருதவாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், அசோவ்ஸ்டல் ஆலை மீது சரமாரி தாக்குதல் நடத்தும் காணொளி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
அசோவ்ஸ்டல் ஆலையை மூடுவதே தங்களின் நோக்கம் என ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.